ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் கட்டண பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாரதீய போக்குவரத்து ஆட்டோ, டெம்போ, மினிடோர் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்ட மீட்டர் கட்டணமான குறைந்தளவு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30, அடுத்து வருகிற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.15ம் அரசு வழங்கினால் அந்த கட்டணத்தை அமல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களும், தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளோம்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனையில் தமிழக அரசு பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில், ஆட்டோ தொழிலையும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் வகையில் இந்த தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீட்டர் கட்டணத்தை நீதிமன்றம் அறிவித்தபடி தொழிற்சங்கத்தை அழைத்து பேசி உடனே கட்டணத்தை முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சென்னைக்கு அறிவித்தது போல் தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்டோக்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்திய மீட்டர் வழங்க வேண்டும்.

ஆட்டோ தொழில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தாலும், கோவை மாவட்டத்தில் அதிகமான ஆட்டோக்கள் இருப்பதாலும் ஆட்டோக்களுக்கு வழங்கும் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...