கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை பல ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இலவச வீட்டுமனை கேட்டு பல வருடங்களாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தனியார் ஆக்கிரமிதுள்ள அரசு நிலங்களில் தாங்கள் குடியமர்ந்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.
முன்னதாக, அரசு நிலத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.