சசிகலாவிற்கு கட்சியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என அ.தி.மு.க-வின் மூத்த தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்


சசிகலாவிற்கு கட்சியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.கவின் மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, முதலமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தி உள்ளேன். ஆட்சியும் கட்சி தலைமையும் ஓரே இடத்தில் இருக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருக்கின்றது. சசிகலா முதலமைச்சராக வர வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்துள்ளேன். 

மேலும், ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தாரோ அதை சசிகலாவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால், தொண்டன் என்ற முறையில் சசிகலா ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். 

சசிகலா முதலைமைச்சராவதற்கு கட்சியில் எவ்வித எதிர்ப்பும்  இல்லை. தொண்டர்களும் அவர் முதலமைச்சராவதையே விரும்புகின்றனர். சசிகலா முதலைமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அ.தி.மு.க அமைச்சர்களும், நிர்வாகிகளும் தெரிவிக்கும் கருத்திற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில் சொல்ல வேண்டும் என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தி இருப்பது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சியினர் அப்படித்தான் சொல்லுவார்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் அவரது தந்தையே கட்சி தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் இருந்தபோது அது குறித்து கருத்து கூறினார்களா? என எதிர் கேள்வியெழுப்பினார்.

இதேபோல், நாடாளுமன்ற துணை சபாநாயகர் லெட்டர் பேடினை பயன்படுத்தி சசிகலாவிடம் கடிதம் கொடுத்துள்ளது தவறான நடவடிக்கை என்ற சர்ச்சைகள் குறித்தும் தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தம்பிதுரை பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் சொந்த வேலையாக வந்துள்ளதாகவும் இன்று இரவே அவர் மீண்டும் சென்னை திரும்புவதாகவும் அ.தி.மு.க வினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...