கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் துறையின் மூலம் பொள்ளாச்சி வட்டம், வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி தம்பம்பதி பகுதி மலைவாழ் மக்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்று விதமாக 22 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் கோயம்புத்தூர் வடக்கு பகுதியை சேர்ந்த திருநங்கைகள் 5 நபர்களுக்கும் புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கியதுடன் மேலும் பொதுமக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.