கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் திங்களன்று நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2015- 16 ஆம் ஆண்டுக்கான விருதுத் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.
இதில், கிரண் பிரனேஷ் என்பவருக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசு தொகை 3000 ரூபாயிக்கான காசோலையினையும், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற பி.யுவஸ்ரீ-க்கு 2000 ரூபாய்க்கான காசோலையினையும், கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் 308 மாணவிகளுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்.
மேலும், மாவட்ட அளவில் முதல், இடண்டாம், மூன்றாம் நிலைகள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவுகளும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில், கிரண் பிரனேஷ் என்பவருக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசு தொகை 3000 ரூபாயிக்கான காசோலையினையும், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற பி.யுவஸ்ரீ-க்கு 2000 ரூபாய்க்கான காசோலையினையும், கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் 308 மாணவிகளுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்.
மேலும், மாவட்ட அளவில் முதல், இடண்டாம், மூன்றாம் நிலைகள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவுகளும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.