கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 63-வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, 57-வது வார்டுக்குட்பட்ட ஜி.வி. ரெசிடன்சி அருகிலுள்ள தேவேந்தர் வீதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பொது கழிப்பிடத்தையும், செல்லாண்டியம்மன் கோவில் அருகிலுள்ள அக்ரஹாரம் மேற்கு வீதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பொது கழிப்பிடத்தையும் ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சிங்காநல்லூர் உழவர் சந்தையில் வீணாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் மையத்தை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.