ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா- 2017 மேடை நாடகப் பயிலரங்கம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பாக முத்தமிழ் விழா- 2017 நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புதனன்று (இன்று) மேடை நாடகப் பயிலரங்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமை வகித்தார். தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் கு.பாக்கியம் அனைவரையும் வரவேற்று பேசினார். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் லி.ராம்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிப்புக்கலை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

மேலும்  அவர் தனது உரையில் கூறுகையில், தமிழின் தொன்மையான கலை வடிவமான கூத்துக்கலையில் இருந்துதான் தற்காலத்திய நவீன நாடகங்கள் தோற்றம் பெற்றன என்றும், சங்ககால நாடக வகைகளில் பெண்கள் நடித்து வந்ததாகவும், ஆனால், இடைக்காலத்தில் ஆண்களே பெண் வேடம் அணிந்து நடித்ததாகவும், பிறகு 19ம் நூற்றாண்டிற்கு பின்தான் பாலாம்பாள், பாலாமணி போன்ற பெண் கலைஞர்கள் நடிக்கத் தொடங்கினர் என்று கூறினார்.

"நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்ற கவிமணியின் கூற்றிற்கேற்ப மக்களின் கண்ணையும், செவியையும், கருத்தையும் கவரும் வகையில் மேடைநாடகங்கள் அமைந்து மக்களின் வாழ்வைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.



பயிலரங்கத்தின் இறுதியில் மாணவ நாடகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளும், இல்லத்தரசிகளின் துயரங்களையும் மையமாகக் கொண்ட தமிழச்சி தங்க பாண்டியனின் "கூந்தல் கனவுகள்" என்ற நாடகத்தினை அரங்கேற்றி மாணவியர்களுக்கு நேரடி செயல்முறை பயிற்சியும் அளித்தார்.



இதில், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் க.அபிநயா, சந்திரமதி, சந்திரிகா, ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கிருத்திகா, ஹரிபிரசாத், அருந்ததி, கல்பனா, கிருபாசக்தி ஆகிய மாணவ, மாணவிகள் இணைந்து நடத்திய கலைக் கூத்து நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும்  மாணவியர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...