கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ப.காந்திமதி தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் 2017 ஜனவரி மாதம் முதல் ஐந்து மண்டலங்களில் மாதத்தின் முதல் வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, செவ்வாயன்று கிழக்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 15 மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.