மருத்துவர்களின் அலட்சியத்தால் வாலிபர் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்


கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் மகன் உயிரிழந்ததாகவும், இறப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் அருகேயுள்ள சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் பிரதீப் குமார் (20). இவருக்கு இன்று அதிகாலை நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள எல்லன் தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

மருத்துவர் செலுத்த வேண்டிய ஊசியியை செவிலியரை செலுத்துமாறு கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டதால் பிரதீப்பிற்கு சிறிது நேரத்தில் உடம்பு தூக்கிவாரி போட்டதாகவும், அப்போது செவிலியர்கள் மருத்துவர்களை அழைத்தும் மருத்துவர்கள் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

பிரதீப் என்ன காரணத்தால் அவதிபடுகிறார் என்பது குறித்து மருத்துவர்கள் பரசோதிக்காமல் சென்றுவிட்டதால், சிறிது நேரத்தில் மருத்துவர் ஒரு ஊசி போட்ட பின்னர் பிரதிப்பிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இழந்து கீழே விழுந்த நிலையில், பிரத்தீப்பின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அந்த மருத்துவ அறையில் இருந்த தொலைபேசி, கதவு மற்றும் கண்ணாடியை உடைத்ததுடன் எல்லன் மருத்துவமனையின் நிறுவன மருத்துவர் இராமசந்திரனை தாக்கி உள்ளனர். 

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்த மருத்துவர்கள் காவலர்கள் உதவியுடன் பிரதீப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் கூறுகையில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணமாகவே தன் மகன் உயிரிழந்ததாகவும், சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எல்லன் மருத்துவ நிர்வாகம் தெரிவிக்கையில், பிரதீப் வாந்தி எடுக்கும் போது மூச்சு குழாயில் உணவு துணுக்குகள்  அடைத்து சுயநினைவு இழந்ததாகவும், அதற்காகவே தீவிர சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதீப்பின் உறவினர்கள் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதால் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது உறவினர்களும், அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...