கோவை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் ராஜவீதி பகுதியில் முத்ரா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் தங்கநகைக் கடை மற்றும் முத்ரா புல்லியன்ஸ் என்ற பெயரில் தங்கக்கட்டி விற்பனையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சிவகுமார் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சிவகுமாரின் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, வியாபாரம், பணபரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறை சோதனைக்குப் பின் வரி செலுத்தியது மற்றும் தங்கம் விற்பனை தொடர்பான ரசீதுகள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அங்கு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை எனவும், வருமான வரி தொடர்பான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் சேகர்ரெட்டி, முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், கோவையில் தங்க நகை கடையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிவகுமார் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சிவகுமாரின் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, வியாபாரம், பணபரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறை சோதனைக்குப் பின் வரி செலுத்தியது மற்றும் தங்கம் விற்பனை தொடர்பான ரசீதுகள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அங்கு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை எனவும், வருமான வரி தொடர்பான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் சேகர்ரெட்டி, முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், கோவையில் தங்க நகை கடையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.