ஏஸ்பையர் 2017 என்னும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வரும் ஜனவரி 7ம் தேதியன்று நடத்தவுள்ளது. இப்போட்டியினை பேச்சாளர் மயிலிறகு கே.சுந்தரராஜன் துவங்கிவைக்க உள்ளார்.
இப்போட்டியில், கணித புதிர், பவர்பாய்ன்ட் மூலம் அறிக்கை விளக்குதல் மற்றும் சமர்ப்பித்தல், அறிவியல் மாதிரிகள், ஆங்கில பேச்சுப் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி, மௌனமாக நடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் வெற்றிபெருவோர்க்கு பரிசுப் பொருட்களும், பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 9894033589 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.