தமிழகத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

'வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்ததால், வரும் நாட்களில், குளிர் மேலும் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குளிர் தீவிரமாகும்:

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை நேற்று முடிந்த நிலையில், வட கிழக்கில் இருந்து வீசும் கடல் காற்று முடிவுக்கு வந்துள்ளது. இனி வடகிழக்கில் இருந்து, தரைக்காற்று மட்டுமே வீசும்; அடுத்து குளிர்காலம் தீவிரமாகும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில், 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து, குளிர் அதிகரிக்கும்; இயல்பான வெப்ப நிலை, 22 டிகிரியாக இருக்கும்.

வலுப்பெற வாய்ப்பு:

தற்போது, அந்தமான் மற்றும் சுமத்ராவுக்கு இடையே, வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாகி வருகிறது. இது, 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...