கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைத்தல், குழாய்கள் பதித்தல், இணையதள வடங்கள் அமைத்தல் மற்றும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது சுற்றுச்சூழல் நலன் கருதி பயன்படுத்தப்படும் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மேலும் அவர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலைகள் அமைப்பதும், பழுதுள்ள சாலைகளை சீரமைப்பதும் போன்ற பணிகளில் கோவை மாநகராட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது.
மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைக்கப்படும் பொழுது பாதாள சாக்கடைக் குழாய்கள் பதிக்கும் பணிகள், புதியதாக குடிநீர் விநியோகக் குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து கிணற்று நீர் பகிர்மான குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பாதாள மின் வடம் அமைத்தல், இணையதள வடங்கள் அமைத்தல் போன்ற பணிகளால் சாலையில் ஏற்படும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலம், 98-வது வார்டுக்குட்பட்ட பி.டி.ரோடு, எல்.ஐ.சி. காலனியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், 100-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் மெயின் ரோடு, ஸ்ரீனிவாசா நகர், இரங்கநாதபுரம் மற்றும் கார்மல் நகரில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டிலும், கிழக்கு மண்டலம், 58- வது வார்டுக்குட்பட்ட சக்கையார் நகர் மற்றும் ஜோதி நகரில் ரூ.286.50 லட்சம் மதிப்பீட்டில் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற பல இடங்களில் பிளாஸ்டிக் மூலம் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.
இதுகுறித்து, மேலும் அவர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலைகள் அமைப்பதும், பழுதுள்ள சாலைகளை சீரமைப்பதும் போன்ற பணிகளில் கோவை மாநகராட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது.
மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைக்கப்படும் பொழுது பாதாள சாக்கடைக் குழாய்கள் பதிக்கும் பணிகள், புதியதாக குடிநீர் விநியோகக் குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து கிணற்று நீர் பகிர்மான குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பாதாள மின் வடம் அமைத்தல், இணையதள வடங்கள் அமைத்தல் போன்ற பணிகளால் சாலையில் ஏற்படும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலம், 98-வது வார்டுக்குட்பட்ட பி.டி.ரோடு, எல்.ஐ.சி. காலனியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், 100-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் மெயின் ரோடு, ஸ்ரீனிவாசா நகர், இரங்கநாதபுரம் மற்றும் கார்மல் நகரில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டிலும், கிழக்கு மண்டலம், 58- வது வார்டுக்குட்பட்ட சக்கையார் நகர் மற்றும் ஜோதி நகரில் ரூ.286.50 லட்சம் மதிப்பீட்டில் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற பல இடங்களில் பிளாஸ்டிக் மூலம் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.