திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைத்தல், குழாய்கள் பதித்தல், இணையதள வடங்கள் அமைத்தல் மற்றும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது சுற்றுச்சூழல் நலன் கருதி பயன்படுத்தப்படும் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலைகள் அமைப்பதும், பழுதுள்ள சாலைகளை சீரமைப்பதும் போன்ற பணிகளில் கோவை மாநகராட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைக்கப்படும் பொழுது பாதாள சாக்கடைக் குழாய்கள் பதிக்கும் பணிகள், புதியதாக குடிநீர் விநியோகக் குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து கிணற்று நீர் பகிர்மான குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பாதாள மின் வடம் அமைத்தல், இணையதள வடங்கள் அமைத்தல் போன்ற பணிகளால் சாலையில் ஏற்படும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலம், 98-வது வார்டுக்குட்பட்ட பி.டி.ரோடு, எல்.ஐ.சி. காலனியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், 100-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் மெயின் ரோடு, ஸ்ரீனிவாசா நகர், இரங்கநாதபுரம் மற்றும் கார்மல் நகரில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டிலும், கிழக்கு மண்டலம், 58- வது வார்டுக்குட்பட்ட சக்கையார் நகர் மற்றும் ஜோதி நகரில் ரூ.286.50 லட்சம் மதிப்பீட்டில் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற பல இடங்களில் பிளாஸ்டிக் மூலம் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...