ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி சசிகலா முடிவு செய்வார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி சசிகலா முடிவு செய்வார் என தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் அஞ்சலி ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக அணி சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து குறிச்சி வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து குறிச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், கட்சி தலைமைக்கு ஆதரவு தெரிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக தற்போது சட்டமன்றத்தில் தனிப்பெருன்பான்மையுடன் உள்ளதாகவும், இதனால் மத்திய அரசு தமிழக அரசை அச்சுறுத்தி விட முடியாது எனவும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போட்டியிடுவாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், மூத்த நிர்வாகிகளை கொண்ட கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சசிகலா முடிவு செய்வார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...