கோவை காந்திபுரம் எல்லன் மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி காவல் துறை ஆணையர் அமல்ராஜிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள எல்லன் மருத்துவமனையில் புதனன்று சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட பிரதீப்குமார் என்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்தார் எனக் கூறி அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததுடன், மருத்துவர் ராமசந்திரனையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க கோவை கிளை நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், மருத்துவமனை தரப்பில் தவறுகள் நடந்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தவறானது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதனிடையே, இறந்த பிரதீப்குமாரின் உடல் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள எல்லன் மருத்துவமனையில் புதனன்று சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட பிரதீப்குமார் என்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்தார் எனக் கூறி அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததுடன், மருத்துவர் ராமசந்திரனையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க கோவை கிளை நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், மருத்துவமனை தரப்பில் தவறுகள் நடந்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தவறானது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதனிடையே, இறந்த பிரதீப்குமாரின் உடல் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.