ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் சார்பில் கணினி கருத்துப்பரிமாற்றம், தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம்

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் கணினி கருத்துப்பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம் வியாழனன்று (இன்று) அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

இதில் பங்குபெற இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிஜி, சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் பல நாடுகளில் இருந்து 782 ஆய்வு ஏடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 124 ஆய்வு ஏடுகள் தேர்வு செய்யப்பட்டன.



தொடக்கத்தில் கல்லூரியின் முதல்வர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு இணையதளம் எவ்வாறு அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற க்யன்மெட்ரிஸ் நிர்வாக இயக்குநர் ராஜன் பரசுராமன், மிகை யதார்த்தம் பற்றியும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், தொடர்பு திறனும், அதை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் மிகவும் இன்றியமையாதது என கூறினார்.

இதைத்தொடர்ந்து, நிலைப் பொருள் அபிவிருத்தி, ஐபிஎம் இந்தியா மென்பொருள் ஆய்வக அமைப்புக் குழுவைச் சேர்ந்த கதிரவன் வேலுசாமி பேசுகையில், மென்பொருள் அலுவலகத்தின் பணியாற்ற நிர்வாக திறன் மற்றுமல்லாமல் சிக்கல் தீர்க்கும் திறன் மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையில் பழக்கவழக்கங்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒன்றிணைந்து இருத்தல் வேண்டும் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களால் கருத்தரங்கப் புத்தகம் வெளியிடப்பட்டது. நிரைவாக, தகவல் தொடர்பு துறை தலைவர் பிரகாஷ் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியினை நிரைவு செய்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...