உதவி பேராசிரியை கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரித்து கொலை- காவல் துறை தீவிர விசாரணை


கோவை அருகே இருகூரில் உதவி பேராசிரியை லதா, அவரது  வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் லதா. இவரது கணவர் சிவலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை இருகூர் ஐ.ஓ.பி காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை லதாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்பவர் லதாவின் வீட்டிற்கு சென்ற போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் லதா இறந்து கிடந்துள்ளார். மேலும் கழுத்து அறுக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே சாம்பார் பொடி தூவப்பட்டு இருந்ததும், உதவி பேராசிரியரை லதா நிர்வாண நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரை கற்பழித்து கொலை செய்து பின் எரித்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகின்றனர். 

மேலும், இறந்த பேராசிரியையின் வீட்டில் இருந்து பொருட்கள் எதுவும் திருடப்பட்டு இருக்கின்றதா என்பது குறித்தும், வீட்டிற்கு யார் வந்து சென்றுள்ளார்கள் என்பது குறித்தும் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...