திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னப்பன் (72). இவருக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பருவ மழை பொய்த்துப்போனதை தொடர்ந்து 8 ஆழ் குழாய் கிணறுகள் தோண்டி விவசாயத்திற்கு தண்ணீர் பெற முயற்சித்துள்ளார். ஆனால் 80 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வராததால் அதிர்ச்சி அடைந்த சின்னபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் தொடர்ந்து விவசாயிகள் பலியாகிவருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பருவ மழை பொய்த்துப்போனதை தொடர்ந்து 8 ஆழ் குழாய் கிணறுகள் தோண்டி விவசாயத்திற்கு தண்ணீர் பெற முயற்சித்துள்ளார். ஆனால் 80 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வராததால் அதிர்ச்சி அடைந்த சின்னபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் தொடர்ந்து விவசாயிகள் பலியாகிவருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.