கோவையில் தனியார் பள்ளி நிறுவனர்கள் அமைப்பின் ஏ எம் பி எஸ் வெள்ளி விழா நிகழ்ச்சி ஜன.7-யில் துவக்கம்


கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளிகளின் நிறுவனர்கள் அமைப்பான ஏ எம் பி எஸ்-யின் 25 வது ஆண்டு நிரைவு விழா வரும் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அரசின் யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி, ஏ எம் பி எஸ் கல்வி கண்காட்சியை துவக்கி வைக்கவுள்ளார்.

துவக்க விழா நிகழ்ச்சியில் "சென்னை வெள்ளம்" தொடர்பான போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய அளவிலான சிறந்த கல்வியாளர்களின் கல்வி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வெள்ளி விழாவின் முக்கிய அம்சமாக தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி கல்வி மேம்பாட்டிற்காக கலந்துரையாட உள்ளனர். மேலும், மும்பை, கோவா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏ எம் பி எஸ் அமைப்பினை உருவாக்கிய பதினொன்று கல்வியாளர்களை கவுரவிக்கும விழா நடைபெறுகின்றது. இவ்விழாவிற்கு அவிநாசிலிங்கம் பல்கலைக் கழக துணை வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து, மாலை நிறைவு விழா நிகழ்ச்சியில், யுஜிசி முன்னாள் துணைத் தலைவர், பேராசிரியர் முனைவர் எச்.தேவராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். 

பள்ளி மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கல்வி தொடர்பான 76 கல்வி நிறுவனங்களின் கல்வி கண்காட்சி இரண்டு நாட்களும் நடைபெறுகின்றன.

இதுகுறித்து இவ்வாமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.பி.டி.போஸ் நமது நிருபரிடம் கூறுகையில், இந்திய அளவில் இதுபோன்ற கல்விக் கண்காட்சி அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் இதுவே முதன் முறை ஆகும். இந்த கண்காட்சியில் பள்ளிகளுக்கான உபகரணங்களை விநியோகிப்பவர்களுக்கென 76 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. பள்ளி நிறுவனர்களுக்கு தங்களது பள்ளியை மேம்படுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு ஆகும். இதில், ஆய்வகம், இருக்கைகள், நவீன கற்பிக்கும் கருவி உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

மேலும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் ஆகியோருக்காக கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. இந்த கருத்தரங்கில் பல்வேறு கற்பித்தல் முறை குறித்து விளக்கப்படவுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பார்வை குறைபாடுடையவர்களுக்கு என சிறப்பாக கற்பித்தல் முறை குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளியில் தனி ஒதுக்கீடு உள்ளதா என்ற நமது நிருபர் கேள்விக்கு, ஒதுக்கீடு என்று தனியாக எதுவும் இல்லை. ஆனால், அவர்களுக்கென கற்பிக்கும் வழிமுறையில் மாற்றம் செய்யப்படும்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...