குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 151 பயணாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணையினை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


கோவை மாவட்டம், கோவை மாநகராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையத்தில் 2017 ஜனவரி 5ம் தேதியன்று தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டுவதற்க்கான ஆணை வழங்கும் விழா நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் குளத்துப்பாளையத்தில் 50 நபர்களுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடு கட்டுவதற்கான ஆணையினையும், சுண்டக்காமுத்தூர் பகுதியில் 101 நபர்களுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் வீடு கட்டுவதற்க்கான ஆணையினையும் வழங்கி பேசியதாவது:-

தமிழக முதலமைச்சரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு மனைக்கான ஆவணங்கள் வைத்துள்ள நலிந்த வருவாய் பிரிவினர் அனைவருக்கும் வழங்கும் வகையில் திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இத்திட்டத்தில் பயன்பெறுவோர் தங்களது குடிசையை அல்லது ஓட்டு வீட்டை அகற்றி 300 சதுர அடி கட்டுமான பரப்பளவிற்கு குறையாமல் கான்கீரிட் தளம் போட்ட வீடு கட்ட அரசு மானியமாக ரூ.2.10 லட்சம் வழங்கி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் வீடுகட்டி இருப்பின் மாடியில் விரிவுபடுத்த ரூ.1.60 லட்சம் அரசு மானியம் வழங்குகிறது. மேலும், வீட்டு மனைப்பட்டா வைத்திருப்பவர்கள் பெரிய வீடு கட்டும் வகையில் குறைந்த வட்டியில் ரூ.6 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் நோக்கம் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே ஆகும். அதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனவே, தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" இவ்வாறு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட குடிசை பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...