மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 30 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி காப்பீட்டு ஊழியர்கள் குற்றச்சாட்டு


மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி அமைப்பினர், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு கொள்கையை கண்டித்து எல்ஐசி காப்பீட்டு ஊழியர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலக வாளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பில் இது வரை சரியான தீர்வு கிடைக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதல் பெட்ரோல் பங்க், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பழைய நோட்டுகள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தது, ஆனால் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியது.

இதனால் எல்.ஐ.சி நிறுவனத்தில் உள்ள 30 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...