கோவை, க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில் ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆர்ய வைத்ய சாலையின் இயக்குநரும், அவினாசிலிங்க பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பி.ஆர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரைநிகழ்த்தி பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சுமார் 600 மாணவர்களுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் ஹரிஷ் குமார், போருளாளர் விஜயன், இணைச் செயலாளர் பங்கஜ்குமார், கல்லூரி முதல்வர் சுரேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், சுமார் 600 மாணவர்களுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் ஹரிஷ் குமார், போருளாளர் விஜயன், இணைச் செயலாளர் பங்கஜ்குமார், கல்லூரி முதல்வர் சுரேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
