தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி, கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியை பயிற்று மொழியாக்க வேண்டும், அரசுப்பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 100 சதவீதம் பணி வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பேரூர் ஆதினம் வளர் தமிழ் இயக்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பேரூர் ஆதின இளையப்பட்டம் மருதாச்சல அடிகாளர், தமிழ் அமைப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையை மாற்றி, அனைத்து தொடக்க பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கைப்படி உயர் நீதிமன்றம், ஆட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மொழியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், தமிழக அரசு உடனடியாக இக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனில் தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...