அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் (இஸ்கான்) பொன்விழா கொண்டாட்டம்

அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் பொன்விழாவும், 25வது ஆண்டு தேர்த்திருவிழாவின் துவக்கவிழாவும் கோவை இஸ்கான் சார்பில் ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெற்றது. விழாவில், தவத்திரு ஜெயப்பதாக சுவாமி மஹாராஜூம், மண்டலச் செயலாளர் மற்றும் கோவை இஸ்கான் தலைவருமான தவத்திரு பக்தி வினோத சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 



அன்னபூர்ணா குழுமத்தலைவர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். கோவை கே.ஜி மருத்துவமனையின் மருத்துவர் பக்தவத்சலம் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பேசிய தவத்திரு ஜெயப்பதாக சுவாமி இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கினார். மேலும், அவர் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மாயாப்பூர் பிரபஞ்சத்தில் உள்ள கோள்களின் அமைப்பைச் சித்தரிக்கும் வகையில் மிகப்பிரமாண்டமான "வேத கோளரங்க ஆலயம்" ஒன்று அமைக்கப்பட்டு வருவதை அறிவித்தார். 



இஸ்கான் தலைவரும் மற்றும் மண்டலச் செயலாளர் தவத்திரு பக்தி வினோத சுவாமி தனது உரையில்; இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகால சாதனைகளை சுட்டிகாட்டினார். உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்க, வழிவழியாக வரும் நம் மரபை பின்பற்றி மக்கள் தங்களுடைய எண்ணைகளை மாற்றியமைப்பதும், ஆன்மீகத்தில் ஈடுபடுவதும் மிகமிக அவசியம் என்றுரைத்தார். கொடிசியாவின் அருகில் உள்ள ஸ்ரீ ஜெகன்னாதர் ஆலயவளாகத்தில், 60 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான ஸ்ரீராதா கிருஷ்ணர் ஆலயம் கோவையின் கலாச்சார மையமாகத் திகழும் எனக் கூறினார்.  



தொடர்ந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சீனா போன்ற 25 நாடுகளில் கிருஷ்ண பக்தர்கள் நடத்திய பஜனை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...