கோவை எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் வித்யா ராமசாமி. இவரது கணவர் ராமசாமி காசியாபாத் சிண்டிகேட் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். வித்யா ராமசாமி பொள்ளாச்சி எல்.ஐ.சி யில் உயர் நிலை உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய வித்யா ராமசாமி வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே வைக்கபட்டிருந்த 80 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)