ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் இராதிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்;  மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தலைமை உரையாற்றினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் ஆளுமைப்பண்பு மற்றும் மத்திய அரசின்  சுகாதாரத் திட்டமான “சுவச் பாரத் அபியான்” என்பதன் கீழ் சுகாதார மேலாண்மை குறித்தும், நகரத்தை எவ்வாறு சுகாதாரமாக வைத்துக் கொள்வது? மக்கும் குப்பை, மக்காத குப்பையை எவ்வாறு தரம் பிரிப்பது? என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.

கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி  பேரிடர் மேலாண்மை, இரத்த தான முகாம் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். நடப்பாண்டு நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகள் குறித்து கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் பாலாஜி உரையாற்றினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் திட்ட அலுவலர் குமரேசன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...