சங்கரா கல்லூரியில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” குறித்த தேசியக் கருத்தரங்கு

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று தேசிய தரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நிதிநல்கையுடன் கல்லூரியின் உள்தர உறுதிக் குழுவின் சார்பில் “உயர்கல்வியில் தரமேன்பாடுகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வனிதா கருத்தரங்கினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவரது உரையில் உலகத்தரத்தை அடைய கடைப்பிடிக்க வேண்டிய மாறுதல்கள் குறித்து பேசினார்.



கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் உயர்கல்வியில் தர மதிப்பீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் விளக்கினார். அவரது உரையில் தகுதி வாய்ந்த மனித வள ஆதாரங்களை உருவாக்குவதில் ஆய்வுப்பணியில் பயிற்சிகள், ஆசிரியர் தொழிலில் நிர்வாகத் தேவைகள் மற்றும் தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்குதலின் தேவைகளை எடுத்துரைத்தார்.



இரண்டாம் அமர்வில் காந்திகிராம பல்கலைக்கழகக் கணினிப் பயன்பாட்டுத் துறைத்தலைவர் சண்முகவடிவு உயர்கல்வி நிறுவனங்களில் தரமதிப்பீட்டு அளவீடுகள் என்னும் தலைப்பில் ஒளிப்படக்காட்சிகள் மூலம் உரையாற்றினார். அவரது உரையில் புதிய கல்விக் கொள்கை, வகுப்பறையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விளக்கமாக கூறினார்.



மூன்றாம் அமர்வில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராதிகா கற்றல் கற்பித்தலில் தர மேன்பாடுகள் குறித்து சிறப்பான விளக்கவுரை நிகழ்த்தினார். 



இக்கருத்தரங்கில் கோவை, ஈரோடு, ஊட்டி, பகுதிகளில் உள்ள கல்லூரிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் IQAC ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர், கருத்தரங்கு நிரைவு நிகழ்ச்சியில் சங்கரா கல்லூரி IQAC யின் பொறுப்பாளர் உமா தேசியதரமதிப்பீட்டு அங்கீகாரக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. நிறைவாக சங்கரா கல்லூரியின் IQACயின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு நன்றியுரை கூறினார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...