கோவையில் ஆண்டுதோறும் இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன், 25-வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட 42 அடி உயர தேரில் ஜெகநாதர், சுப்ரதா தேவி சிலைகளுடன் பலதேவர் சிலைகளும் அமைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
.jpg)
இதில் வெளிநாட்டினர் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவற்றுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும், ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
.jpg)
இத்தேர் திருவிழாவில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். ரஷ்யாவில் இருந்து வந்திருந்த வேலன்சியா இதுகுறித்து கூறும் போது, இந்தியாவில் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
.jpg)
பொதுவாக மக்கள் கோவில்களில் கடவுளை வழிபட செல்லும் நிலையில் மக்களை காண கடவுள் வருவதாகவும், இத்தேர் திருவிழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
.jpg)
இதில் வெளிநாட்டினர் உட்பட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவற்றுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும், ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
.jpg)
இத்தேர் திருவிழாவில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். ரஷ்யாவில் இருந்து வந்திருந்த வேலன்சியா இதுகுறித்து கூறும் போது, இந்தியாவில் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
.jpg)
பொதுவாக மக்கள் கோவில்களில் கடவுளை வழிபட செல்லும் நிலையில் மக்களை காண கடவுள் வருவதாகவும், இத்தேர் திருவிழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.