வேலை வாய்ப்பு முகாமிற்கு குறித்த நிறுவனங்கள் வராததால் மாணவர்கள் முற்றுகை!


கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

இந்த கல்லூரியில், சிங்காநல்லூர் அருகே உள்ள 'ப்ரைட்ஸ் ஈவன்ட்ஸ்' என்ற தனியார் வேலைவாய்ப்பு அமைப்பினர்  ஒருங்கிணைத்த வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள கோவை ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல முன்னனி நிறுவனங்கள் வரும் என்றும், வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்றும் ப்ரட் ஈவன்ட்ஸ் என்ற தனியார் அமைப்பின் சார்பில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.300 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலை வாய்ப்பு முகாமிற்கு 26 பெரிய நிறுவனங்கள்  வருதாக கூறப்பட்ட எந்த நிறுவனமும் வரவில்லை என்றும், தங்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப தர வலியுறுத்தியும்  மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



இதை தொடர்ந்து, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...