பயணிகள் ரயில் பெட்டியில் முழு சோதனையில் ஈடுபட்ட சேலம் தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகள்


ரயில் பயணத்தில் பயணிகளின் சேவை மற்றும் மனநிறைவினை மேம்படுத்தும் நோக்கில் சேலம் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயிலில் ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகளால் முழுமையான சோதனை நடைபெற்றது. 



இந்த ஆய்வின் மூலம், ரயில் பெட்டியில் பயணிகளுக்கான சேவைகள் சரியாக உள்ளதா, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள், அங்கீகரிக்கப்படாத பயணிகள், பயணச் சீட்டு பெறாத பயணிகள், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது.

சேலம் பிரிவு வர்த்தக மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் விஜூ வின் தலமையில் நடைபெற்ற இந்த சோதனை, கோவை மற்றும் சேலம் இடையிலான ரயில் பெட்டியிலும், திருவனந்தபுரம் - இந்தூர் அகல்யா நகரி எக்ஸ்பிரஸ் (22646), ஹைதராபாத்- சபரி எக்ஸ்பிரஸ் திருவேந்ரம் (17229) ஆகிய ரயிலிலும் நடைபெற்றது.



இச்சோதனையின் போது 104 பேர் பயணச் சுட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து மொத்தம் 39 ஆயிரத்து 90 ரூபாய் அபராதம் வசூழிக்கப்பட்டது. 8 அங்கீகரிக்கப்படாத உணவு விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஆர்பிப்-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின் அவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூழிக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒரு திருநங்கை நபர் எச்சரிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் பயணிகளிடம் ரயில் பயணம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, அதிகாரிகளின் இந்த சோதனை மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...