' தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும்' மாநிலச் செயலாளர் முத்தரசன் உறுதி.


வறட்சி பாதுகாப்புகள் குறித்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசு விரைவாக தாக்கல் செய்து பேரிடர் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
 கோவை சின்னியம்பாளையம் தியாகிகளின் 71 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இடதுசாரிகள் சார்பில் அவர்களது நினைவு இடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் தான் இழப்பு என்பதால், பெட்ரோல் முகவர்கள் அறிவிப்பு சரியானது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பல மாதங்களாக வறட்சி நிலவியதால் நம்பிக்கைக்குரிய பதில் அரசிடம் இருந்து வராததால் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறிய அவர், விவசாயிகள் நோய்வாய், வயோதிகம் காரணமாக இறந்ததாக சில அமைச்சர்கள் கூறுவது கண்டனத்துக்குரியது என்றார்.

 விவசாயிகளை கொச்சைப்படுத்தும் செயல் என்றார். தமிழகத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும், தினமும் 400ரூபாய் கூலி, கடந்தாண்டு காப்பீட்டுத் தொகையையும், தனியாரிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர் பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்தும் வர்தா புயலுக்கு முதற்கட்டமாக கேட்கப்பட்ட 1000 கோடி ரூபாயில் ஒரு பைசா கூட இதுவரை தராமல் தமிழக அரசுக்கு எப்போதும் உதவ தயார் என்று மத்திய அரசு கூறுவதை சுட்டிக்காட்டி சாடினார்.

 நீதிமன்றத்தை காரணம் காட்டி தமிழக பாஜக, பொன். ராதாகிருஷ்ணன் தவறான தகவலை கொடுத்து வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை மீறி நடைபெற்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...