தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான நீலகிரியில் அமைந்துள்ள குன்னூருக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருகைதருவர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சில உடைமைகளையும் தவறவிட்டுச் செல்வது அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு மக்களால் தவறவிடப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடமே சேர்த்திடும் வகையில் குன்னூர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மக்கள் சேவை என ஒரு சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இச்சேவை மையத்தினர், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் சந்தை பகுதி, போட்ஹவுஸ், காட்சிமுனை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தவறவிட்டுச் செல்லும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விட்டுச் செல்லும் பொருட்களை வியாபாரிகள் சங்கத்தின் பொதுமக்கள் சேவை பிரிவில் ஒப்படைத்து விடுவர்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சந்தைப் பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு கூறப்படும். பின், அதனை தவறவிட்ட நபர் உரிய அடையாளம் மற்றும் ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச் செல்லலாம்.

இவ்வாறு மக்களால் தவறவிடப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடமே சேர்த்திடும் வகையில் குன்னூர் சந்தை வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மக்கள் சேவை என ஒரு சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இச்சேவை மையத்தினர், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் சந்தை பகுதி, போட்ஹவுஸ், காட்சிமுனை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தவறவிட்டுச் செல்லும் பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் விட்டுச் செல்லும் பொருட்களை வியாபாரிகள் சங்கத்தின் பொதுமக்கள் சேவை பிரிவில் ஒப்படைத்து விடுவர்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சந்தைப் பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு கூறப்படும். பின், அதனை தவறவிட்ட நபர் உரிய அடையாளம் மற்றும் ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச் செல்லலாம்.