ஆம் ஆத்மி கட்சி சார்பில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நமது மாவட்டத்தில் இன்னும் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஏழை பெற்றோர்களின் சார்பாகவும், முந்திய கல்வி ஆண்டில் ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு கோவை ஆம் ஆத்மி  கட்சி சார்பில் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன் வைத்தனர்.



அதில், அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தளத்திலோ அல்லது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமோ விண்ணப்பிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி உள்ள ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் வரிசை எண் கட்டாயமாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் முன்பாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தகவல் பலகை வைத்தல் வேண்டும். பெற்றோர்களிடம் இருந்து எந்த வகையிலும் பணம் வசூல் செய்யக்கூடாது. மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட கல்வித்துறை இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேர்க்கை பற்றிய விவரங்களை பள்ளியின் முன்புறம் தகவல் பலகையில் வைக்க வேண்டும். இந்த சட்டத்தை முழுமையாக மக்கள் பயன்பெறும் வகையில் இதற்கு என பிரத்யோக உதவி மையம் அல்லது தொடர்பு எண் அமைத்தல் வேண்டும். இந்த சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை மறுக்கும் பள்ளிகளில் மீது கடும் நடவடிக்கையும் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அறிக்கையை வெளியிட வேண்டும். 

இதுபோன்ற சட்டதிட்டங்கள் நமது அண்டை நாடுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நமது மாவட்டம் தமிழகத்திற்கே முன்னோடி மாவட்டமாக திகழ்ந்திட இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட மக்கள் சார்பாக கோவை ஆம் ஆத்மி கட்சி இணைச் செயலாளர் தாமோதரன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...