மகளை மீட்டுத் தரக்கோரி காருண்யா கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர்

கோவை காருண்யா நகரை அடுத்த பச்சினம்பதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய பெருமாள். இவரது மகள் மனோ (20). இவர் காருண்யா கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதியன்று சுப்பிரமணிய பெருமாளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ஒரு இளைஞர், நான் உனது மகளை கூட்டிச் சென்றுவிட்டதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சுப்பிரமணிய பெருமாள், காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சுப்பிரமணிய பெருமாளை தொலைபேசியில் அழைத்தது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25) என்பது தெரியவந்தது. மேலும், சிவகுமார் மற்றும் மனோ காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் இருவரையும் தேடிவருகின்றனர்.



இதனிடையே, பெண்ணை மீட்டுத்தரக் கோரி அக்கல்லூரி முன்பு பெற்றோர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...