10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி த.பெ.தி.க-வினர் ஆட்சியரிடம் மனு


தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிறை கதவுகளுக்கு பின்னர் கைவிலங்கு அணிந்து இருப்பது போல நூதன முறையில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு அவ்வமைப்பினர் சிறைவாசிகளின் நிலையை சித்தரிக்கும் வகையில் சிறை கதவுகளுக்குள் இருப்பது போல சித்தரிக்கும் வகையில், சிறை கதவுகளுடன் கைவிலங்கு அணிந்தபடி வந்தனர். 

கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருவதாகவும் த.பெ.தி.க-வினர் குற்றம் சாட்டினர். 

கடந்த காலங்களில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

சிறை கதவுடன் கைவிலங்கிட்டபடி மனு அளிக்க வந்தவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...