தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடப்பதாகவும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் காய்ந்த தேய்காய்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வந்த விவசாயிகள், தமிழகம் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்து வருவதால் கடந்த சில நாட்களில் மட்டும் 128 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் தான் உயிரிழந்து இருப்பதாக தமிழக அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என குற்றம்சாட்டினர். 

மேலும், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய விவசாயிகள், வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடத்தப்படுவதாகவும், ஆய்வு பணிகள் முறையாக நடக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். 

வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...