தமிழகத்தில் வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடப்பதாகவும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் காய்ந்த தேய்காய்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வந்த விவசாயிகள், தமிழகம் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்து வருவதால் கடந்த சில நாட்களில் மட்டும் 128 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் தான் உயிரிழந்து இருப்பதாக தமிழக அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய விவசாயிகள், வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடத்தப்படுவதாகவும், ஆய்வு பணிகள் முறையாக நடக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வந்த விவசாயிகள், தமிழகம் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்து வருவதால் கடந்த சில நாட்களில் மட்டும் 128 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் தான் உயிரிழந்து இருப்பதாக தமிழக அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என குற்றம்சாட்டினர்.
மேலும், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய விவசாயிகள், வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடத்தப்படுவதாகவும், ஆய்வு பணிகள் முறையாக நடக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.