தமிழத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை கண்டித்து, கோவை அரசு கலைக்கல்லூரியில் அகில பாரதீய வித்யார்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பீட்டா அமைப்பின் இந்தியாவிற்கான முதன்மை செயல் அதிகாரியான பூர்வா ஜோஸ் புராவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டுமெனவும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேப்போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் திரண்ட சமூக வலைதள பதிவாளர்கள், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அப்போது முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒருங்கிணைந்து இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை கண்டித்து, கோவை அரசு கலைக்கல்லூரியில் அகில பாரதீய வித்யார்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பீட்டா அமைப்பின் இந்தியாவிற்கான முதன்மை செயல் அதிகாரியான பூர்வா ஜோஸ் புராவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டுமெனவும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேப்போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் திரண்ட சமூக வலைதள பதிவாளர்கள், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அப்போது முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒருங்கிணைந்து இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.