பீட்டா அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்

தமிழத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை கண்டித்து, கோவை அரசு கலைக்கல்லூரியில் அகில பாரதீய வித்யார்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பியபடி பீட்டா அமைப்பின் இந்தியாவிற்கான முதன்மை செயல் அதிகாரியான பூர்வா ஜோஸ் புராவின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதியளிக்க வேண்டுமெனவும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேப்போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் திரண்ட சமூக வலைதள பதிவாளர்கள், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். அப்போது முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒருங்கிணைந்து இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...