தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வறட்சி நிலவரம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை எனவும் உடனடியாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  பா.ஜ.க  தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த  பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:- மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக தங்கம், உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முழு பலன் தெரிய 6 மாதம் காலம் வரை ஆகும் எனவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய காரணமாக இருந்தது சோனியா காந்தி, கருணாநிதி, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய மூவர் மட்டுமே என குற்றம் சாட்டிய அவர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக் கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதென்றால் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வீட்டின் முன் மட்டுமே போராட்டம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்ட அவர், மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டு திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

வரவிருக்கும் பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ப.சிதம்பரத்தின் பேச்சுக்கள் அவர் எப்படி நிதியமைச்சராக பணியாற்றினார் என்பதை கேள்விக்குறியாக்குவதாகவும் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...