காந்திபார்க் பகுதியில் சாலையோரங்களில் வீடு வழங்கக் கோரி சாட்டையால் அடித்து அலைகுடி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை காந்திபார்க் பகுதியில் 20க்கும் மேற்பட்ட அலைகுடி மக்கள் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  வீடு இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் வசித்து வரும் நிலையில் வீடு வழங்கக் கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. 



இதனிடையே, சமீபத்தில் சாலையோரங்களில் வசித்த கூடை பின்னுபவர்கள் சிலருக்கு வீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் எனக் கோரி அலைகுடி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளம் அடித்து, சாட்டயால் தங்களைத் தாக்கி நடனம் ஆடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



தங்களுக்கு வீடு இல்லாததால் குழந்தைகளை படிக்கக் கூட வைக்க முடியவில்லை எனவும், தங்கள் குழந்தைகள் படிக்க வசதியாக தங்களுக்கும் வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலைகுடி மக்கள் வலியுறுத்தினர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு அலைகுடி மக்கள் மேளம் இசைத்து நடனமாடியபடி நூதன முறையில் மனு அளிக்க வந்தது பரபரப்பினை ஏற்படுத்தியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...