மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து, கோவைக்கு வருகை தந்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதற்கு, பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து, கோவைக்கு வருகை தந்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை கோவை விமான நிலைய நுழைவு வாயிலுக்கு முன்பாக கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கட்டாய விடுப்பிற்கு பதிலாக விருப்ப விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்து இருப்பது தமிழர்களுக்கு எதிரான செயல் என குற்றம்சாட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
இதையடுத்து மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதற்கு, பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து, கோவைக்கு வருகை தந்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை கோவை விமான நிலைய நுழைவு வாயிலுக்கு முன்பாக கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கட்டாய விடுப்பிற்கு பதிலாக விருப்ப விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்து இருப்பது தமிழர்களுக்கு எதிரான செயல் என குற்றம்சாட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
இதையடுத்து மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.