கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து கோவைக்கு வந்த மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து, கோவைக்கு வருகை தந்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதற்கு, பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதைக் கண்டித்து, கோவைக்கு வருகை தந்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று காலை கோவை விமான நிலைய நுழைவு வாயிலுக்கு முன்பாக கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கட்டாய விடுப்பிற்கு பதிலாக விருப்ப விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்து இருப்பது தமிழர்களுக்கு எதிரான செயல் என குற்றம்சாட்டிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர். 

இதையடுத்து மத்திய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...