கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இம்மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 13ம் தேதியன்று காலை 10.30 மணி முதல் 4 மணி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து பட்டதாரி, முதுகலை பட்டப்படிப்பு, ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் பங்கேற்கலாம்.
இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் பங்கேற்போரிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மேலும், இதன் மூலம் வேலை பெருவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்துசெய்யப்பட மாட்டாது.
எனவே இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பெருந்திரளானோர் பங்கேற்று வேலை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.