சங்கரா கல்வி நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது


சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் பாரம்பரியமானதுமான ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இந்த கையெழுத்து பிரச்சாரமானது இந்தியாவில் கால்நடை வளர்ப்போர் உரிமைகளைப் பாதுகாத்தல், வீர விளையாட்டுகளுக்கு ஊக்கம் கொடுத்தல் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



இந்த கையெழுத்து பிரச்சாரத்தின் போது சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிறுவன வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்போம், ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டின் பெருமை, ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைவோம்" ஆகிய வாசகங்கள் எழுதியிருந்த பதாகைகளில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன், சங்கரா மேலாண்மை அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் எச்.பரியேஷ், சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதை தங்களது கையெழுத்துகளை பதிவு செய்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அக்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள், நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...