அனைத்திந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை துவங்குகிறது.
இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
2016-17ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவில் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதில் இந்தியாவில் உள்ள 150 பல்கலை கழகங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற உள்ளனர்.
ஆண்கள் மற்றும் பெண்ளுக்கு 22 வகை தடகள போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பார்கள். இப்போட்டிகளில் 180 நடுவர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
மேலும், முதன் முறையாக மின்னனு இயந்திரங்கள் கொண்டு தடகள வீரர்களின் புள்ளிகள் அளவீடு செய்யப்படவுள்ளது. இதன் துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு தடகள போட்டிகள் தலைவர் தேவாரம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு தலைமை செயலர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக கூறினர்.