தமிழர்களின் சிறப்புமிக்க பொங்கல் தினத்திற்கான விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வகையில் எதிர்ப்புகளையும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதுதவிர, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இதுகுறித்தான கடிதத்தையும் இன்று காலை அனுப்பி இருந்தார்.
தமிழகத்திலிருந்து இப்படி ஒரு பலத்த எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்தே மத்திய பாஜக அரசு இதனைத் செய்தது. கட்டாய விடுமுறைத் தொடர்பாக, பாஜக அரசின் சார்பாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வழக்கம் போல தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மீது இதற்கான குறையை கூறி வந்தனர்.
ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் எடுபடவில்லை என்ற சூழலில் தற்போது பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துவிட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

செப்டம்பர் 28ம் தேதி கொண்டாடப்படும் தசரா பண்டிகையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையை வைத்துள்ளது மத்திய அரசு.
தமிழக மக்களில் போராட்டங்களைத் தொடர்ந்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரியும் தமிழக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொங்கள் பண்டிகைக்கே விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்து தமிழர்களின் உணர்ச்சியை முடக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது தோல்வியில் முடிந்ததாக அமைந்துள்ளது.
மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வகையில் எதிர்ப்புகளையும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதுதவிர, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு இதுகுறித்தான கடிதத்தையும் இன்று காலை அனுப்பி இருந்தார்.
தமிழகத்திலிருந்து இப்படி ஒரு பலத்த எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்தே மத்திய பாஜக அரசு இதனைத் செய்தது. கட்டாய விடுமுறைத் தொடர்பாக, பாஜக அரசின் சார்பாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வழக்கம் போல தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மீது இதற்கான குறையை கூறி வந்தனர்.
ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் எடுபடவில்லை என்ற சூழலில் தற்போது பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துவிட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

செப்டம்பர் 28ம் தேதி கொண்டாடப்படும் தசரா பண்டிகையை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையை வைத்துள்ளது மத்திய அரசு.
தமிழக மக்களில் போராட்டங்களைத் தொடர்ந்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியென மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரியும் தமிழக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொங்கள் பண்டிகைக்கே விடுமுறை கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்து தமிழர்களின் உணர்ச்சியை முடக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது தோல்வியில் முடிந்ததாக அமைந்துள்ளது.