361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் உடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து இணையதள மூலம் பாடத்திட்ட பயிற்சி துவக்கம்


கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகம் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இருபெரும் நிறுவனங்களுக்கிடையே ஜனவரி 10ம் தேதியன்று (இன்று) ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

வேளாண் பல்லைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி மற்றும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் பெ.சாந்தி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.அனந்தகுமார் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் சாய்சுமன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்டங்களான முதுநிலை வணிக மேலாண்மை, முதுநிலை பட்டயப் படிப்பான எரிசக்தி மேலாண்மை மற்றும் சான்றிதழ் பாடங்களான, வீடு மற்றும் மாடித்தோட்டம், மூலிகை மற்றும் வாசனைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும்.

வீடு மற்றும் மாடித்தோட்ட விவசாயத்தில் பெருகி வரும் நகர்ப்புற வாசிகளின் ஆர்வத்தின் காரணமாகவும், இளைஞர்களின் கல்வித் தகுதியை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இப்புதிய முயற்சிக்கு வித்திட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை இணையதள வழியாக செயல்படுத்துவதற்குரிய தொழில்நுட்பங்களை 361 டிகிரி மைண்ட்ஸ் வழங்க இருக்கிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...