பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை கடத்த முயற்சி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்னை பிடித்து போலீசார் விசாரணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சிவசாரதி எலக்ரிஷனாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கார்த்திகை ஜோதி இவர் பிரசவத்திற்காக சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்தது பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று பிற்பகல் கார்த்திகை ஜோதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க வேறு வார்டுக்கு அழைத்துச்சென்றனர் அவரது உறவினர்களும் குழந்தையை தனியாக விட்டு விட்டு அவருடன் சென்று விட்டனர்.



இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத பெண் அந்த குழந்தை எனது உறவினர்கள் குழந்தை என எடுத்துக்கொண்டு கடத்த முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கம் உள்ள மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் குழந்தையின் உறவினர்கள் அங்கு வந்ததும் அந்த பெண் தப்பியோட முயன்ற போது அவரை பிடித்து வைத்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அந்த பெண்னை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் கடத்த முயன்ற பெண் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செல்வி என்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளை கடத்தி விற்பணை செய்யும் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா இதற்கு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் கர்பிணி பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...