ஸ்டடி வோர்ல்ட் (Study World) கல்விக் குழுமங்கள் கடந்த 2005ம் ஆண்டு துபாயில் தொடங்கப்பட்டது. கத்தார், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மால்டா ஆகிய நாடுகளில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கல்விக்கூடங்கள் இக்கல்விக்குழுமத்தால் நடத்தப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சியில் இதன் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.
தற்போது கோவையில் இக்கல்விக்குழுமம் செயல்பட உள்ளது. பாலத்துறை அருகே செயல்பட்டுவந்த கலைவாணி பொறியியல் கல்லூரியை ஸ்டடி வோர்ல்ட் குழுமத்தினர் வாங்கியுள்ளனர். இதை தொடர்ந்து, அக்கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இக்கல்லூரியின் மேலாண்மை அதிகாரிகள், ஸ்டடி வோர்ல்ட் கல்வி நிறுவனம் கோவையில் கால்பதிப்பதன் மூலம் உலகத்தரமான பொறியியல் கல்வியை கோவையில் கொடுக்க முடியும். அதோடு, டிசைன் & மீடியா என பிரத்யேகமான பாடப்பிரிவுகள் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.