தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தினை கொண்டாடும் விதமாகவும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் தினசரி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான பழக்கத்திற்கான தனது பொறுப்பினை அளிக்கும் வகையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் 11-வது போக்குவரத்து பூங்காவை இந்தியாவில் முதன்முறையாக கோவையில் துவங்கியது.

மேலும், ஹோண்டா தனது தனிச்சிறப்பான "டிரீம் ரைடிங்" முயற்சியையும் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துவங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பெண்ணும் வாகனம் ஓட்டுபவராக ஆக இம்மையத்தில் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
இதன் துவக்கவிழாவில் தீபக் எம் டாமோர், கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், தலைமையக துணை ஆணையர் மூர்த்தி, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன், கோவை மாநகர காவல் துறை யத்வீந்தர் சிங் குலரியா, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றம் சந்தைப்படுத்துதல் மூத்த துணைத் தலைவர் டோமாகி நாக்யாம், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் தேற்கு பிராந்திய துணை இயக்குநர் யோகேஷ் மதுர், மண்டல விற்பனை தலைவர் ஆஷிஷ் சௌத்ரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இவ்விழாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் மூத்த தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா பேசியதாவது:-
முதலில் வருபவர்கள் தத்துவத்தின் கீழ் 1970 முதல் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவது ஹோண்டாவின் முதன்மை முன்னுரிமையாக இருக்கிறது. இந்தியாவிலும் எங்களது அனைத்து தொழில் நடவடிக்கைகளிலும் பாதுகாப்பினை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக ஹோண்டா ஏற்கனவே பின்பற்றி வருகிறது.
பல்வேறு சாலை பாதுகாப்பு முயற்சிகள் மூலமாக, ஹோண்டா 2 வீலர் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பியுள்ளது. எங்களின் சாலை பாதுகாப்பு முயற்சிகளை இங்கே விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை ஹோண்டா 2 வீலர் இந்தியாவுக்கு வழங்கிய கோவை மாநகர காவல் துறைக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.