கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழகர்களின் பாரம்பரிய மற்றும் கலச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக மண்பாணையில் புத்தரிசி இட்டு மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

அப்போது கிராமிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நடனங்களை ஆடி மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர்.
மேலும், இந்நிகழ்வின் போது பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தமிழர்களின் கலச்சார நடனமான கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று அசத்தியது அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதேபோல், கிராமங்களை நினைவூட்டும் வகையில் குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, ஜவ்வு மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், கிளி ஜோசியமும் அனைவருக்கும் பார்க்கப்பட்டது.