அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரவும், அங்கு தங்கி படிப்பவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கவும், மாணவிகளை மரியாதையாக நடத்திடக்கோரியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்கள் நல விடுதிகளில் கழிப்பறைகள், குடிநீர், மின்விசிறி, படிப்பறைகள், கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.
சில விடுதிகளில் குறைவான அறைகளில் நிறைய மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். தரமற்ற உணவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்டிறைச்சி வழங்க அரசு பணம் கொடுத்தும் விடுதிக் காப்பளர்கள் வழங்குவதில்லை.
பள்ளி மாணவிகளை காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அடித்தும், மிரட்டியும், தகாத வார்த்தைகளால் தீட்டியும் துன்புறுத்தி வருகின்றனர். மாதவிடாய் காலங்களில் அரசு வழங்கும் இலவச நாப்கீன்களை தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கொடுக்காமல் வெளிச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்
அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்கள் நல விடுதிகளில் கழிப்பறைகள், குடிநீர், மின்விசிறி, படிப்பறைகள், கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.
சில விடுதிகளில் குறைவான அறைகளில் நிறைய மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். தரமற்ற உணவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்டிறைச்சி வழங்க அரசு பணம் கொடுத்தும் விடுதிக் காப்பளர்கள் வழங்குவதில்லை.
பள்ளி மாணவிகளை காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அடித்தும், மிரட்டியும், தகாத வார்த்தைகளால் தீட்டியும் துன்புறுத்தி வருகின்றனர். மாதவிடாய் காலங்களில் அரசு வழங்கும் இலவச நாப்கீன்களை தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கொடுக்காமல் வெளிச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்